தினமும் நடக்கும்
சாலையிலென் காலை
நடையில் ஒரு நாள்
ஒரு இழவு விழுந்த
சோகத்திலிருந்த
கூவத்தின் ஓரத்தில் தகரத்தாலான
வசிப்பிடத்தில்
எப்போதும் போலவே
கடந்து சென்றிருப்பேன்
என்ன வுட்டிட்டு பூட்டியே ராஜா
ஆப்பரேஷன் பண்ணின என்
வயிறு பத்திகினு எரியிதே
என்ற ஓலத்தில்
ஒரே பிள்ளை
சுமந்த கருப்பை இழந்த தாயின்
சோகம் என் மனதை அவளோடு
மாரடிக்கவைத்துவிட்டது..
.



19 comments:
Post a Comment